மும்பை தாக்குதல் வழக்கில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்புடன் பேசி முடிவு எடுக் கப்படும் என்று அவனது சட் டத்தரணி கே.பி பவார் கூறினார்.
மும்பைத் தாக்குதல் வழக்கில் கசாப்புக்கு தூக்குத் தண்டனை விதித்ததைத் தொடர்ந்து அவனது சட்டத்தரணி கே.பி பவார் நிருபர்களிடம் கூறியதாவது :-நான் தீர்ப்பை விமர்சிக்க மாட்டேன். ஒரு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு திருப்தி அளிக்காத பட்சத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மேல் நீதிமன்றங்களில் மேன்முறையீடு செய்யலாம். அவ்வளவுதான்.
கசாப்பை சந்திக்க எனக்கு வாய்ப்பு தரப்படும். அப்போது மும்பை மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்வது குறித்து கசாப்பிடம் கேட்பேன். அதன்பின்னர் முடிவு எடுக்கப்படும்.