பிரதி ஊடக அமைச்சர் பதவியிலிருந்து மேவின் சில்வா இராஜினாமா!

mervyn2.jpgபுதிய பாராளுமன்றத்தின் ஊடகத்துறை பிரதியமைச்சராக பதவியேற்ற மேர்வின் சில்வா தான் அந்தப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யப்போவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார்.

இன்று மாலை தனது இராஜினாமாக் கடிதத்தைத் தயார் செய்து விரைவில்  ஜனாதிபதியிடம் கையளிக்கப்போவதாகவும் அவர் கூறினார்.

ஊடகம் மற்றும் தகவல்துறை அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார். தனது இந்த முடிவுக்கு எந்த அமைச்சர்களும் காரணம் அல்லவெனக் கூறிய அவர் ஊடகவியலாளர்கள் முன்போலவே எப்போதும் தன்னுடன் தொடபு கொள்ளலாம் என்றும் கூறினார்.

பெருந்தெருக்கள் பிரதியமைச்சராக பாரிய அபிவிருத்திப் பணிகளை நாடு முழுவதிலும் குறிப்பாக வடக்கு, கிழக்கில் செய்து முடிக்கவேண்டிய பெரும் பொறுப்பு தனக்கு உள்ளதாகவூம் பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *