பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் தெரணியகலை விஸ்வநாதன் செல்லையா தமது 81 ஆவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். வீரகேசரி, டெய்லிமிரர், ஐலண்ட், டெய்லி நியூஸ் ஆகிய பத்திரிகைகளின் செய்தியாளராக நீண்டகாலம் பணிபுரிந்தார்.
முன்னாள் அமைச்சர் வீ.குமாரசாமியின் பிரத்தியேக செயலாளராகவும் சிலகாலம் கடமை புரிந்துள்ளார். தினக்குரல் தெரணியகலை செய்தியாளர் நித்தியானந்தனின் தந்தையான இவரின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை மாலை தெஹியோவிட்ட பொதுமயானத்தில் நடைபெறவுள்ளது.