தேயிலை தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறித்துக்கொண்டிருந்த இரு பெண் தொழிலாளிகள் மீது மின்னல் தாக்கியதால் மிக ஆபத்தான நிலையில் பன்வில மக்கானிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று நண்பகல் 12.30 அளவில் இடம் பெற்றது. 39 வயதுடைய தனரோஜா 32 வயதுடைய நிலந்தி என்ற இரு பெண் தொழிலாளிகளுமே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்கானவர்களாவர்.