தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முஹமட் முஸம்மிலுக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்படாமை குறித்து கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். தேசியப் பட்டியல் மூலம் முஹமட் முஸம்மில் மற்றும் அசல ஜாகொட ஆகியோரை நியமிப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்த போதிலும், இறுதி நேரத்தில் அசல ஜாகொடவிற்கு மட்டுமே தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டுள்ளது.