ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு ஒன்று இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றதாக ஜனாதிபதி செயலகம் தெரிவிக்கின்றது. 2010 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தோதல் நடந்ததன் பின்னர் இரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற முதலாவது சந்திப்பு இதுவாகும்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான இச்சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாகவும் சமகாலப் பிரச்சினைகள் குறித்து இதன்போது ஆரயப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.