நிலாவெளி முதல் முசல்பிட்டி வரை சூரியன் இன்று உச்சம்

ஏப்ரல் மாத உஷ்ணம் நிலவுகின்ற இக்காலப்பகுதியில் இன்று (12ம் திகதி) இலங்கையின் முசல்பிட்டி, கெப்பித்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என்று வானிலை அவதான நிலைய அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

புவிச் சுழற்சியின் அடிப்படையில் இக்காலப் பகுதியில் இலங்கைக்கு நேர் உச்சத்தில் சூரியன் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றது எனவும் அவ்வதிகாரி கூறினார். ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கும் சூரியன் இன்று முசல்பிட்டி, கெபத்திகொல்லாவ, கோமரங்கடவல, நிலாவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சஞ்சரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *