கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெறக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 37 வாக்களிப்பு நிலையங்களில் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அறிய வருகின்றது. நாவலப்பிட்டிய தேர்தல் தொகுதியில் தேர்தல் நடைபெரும் திகதி பின்பு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இதனால் அகில இலங்கை ரீதியில் தேர்தல் முடிவு வெளிவர காலதாமதம் ஏற்படலாம்.