அரசியல் நாகரீகம் வேண்டும். ஏனையோரைப் பற்றித் தூற்றிப் பேசுவதை முற்றாவிட்டுவிட வேண்டும். ஒருவருடைய குறைகளை துருவித் துருவி ஆராய்ந்து மேடைகளில் அவற்றை மக்களுக்கு அம்பலப்படுத்திக்காட்டுவது நாகரிமற்ற செயலாகும். நாங்கள் எங்களைப் பற்றி சிந்திப்போம். சமூகத்திற்கு எங்களால் என்ன செய்யமுடியும் என்ற விடயத்தைப்பற்றி மாத்திரம் பேசுவோம்.
திகாமடுல்ல மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் அமைச்சர் பேரியல் அஷ்ரஃப் இறக்காமத்தில் நடைபெற்ற பிரசாரக் கூடத்தில் பேசும்போது இவ்வாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறியதாவது:- மறைந்த தலைவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் வைத்திருந்த கட்டுப்பாடு இன்று மங்கி மறைந்து விட்டது. எங்கள் தலைவரின் கொள்கைகளை இன்று காணமுடியாது.
கடந்த ஒன்பது வருடங்களாக என்னிடம் தலைவரின் கொள்கைபற்றி கேள்வி கேட்டவர்களிடம் நான் இன்று கேட்க விரும்புகின்றேன். மறைந்த தலைவருக்குப் பிறகு வந்த பராளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் நாம் தோழில் சுமந்து கொண்டு தலைவரைப் போல இரு என்றால் முடியுமா? எனவே பிழைவிட்டவர்கள் மக்கள்தான் என்றார்.