நாளை நாட்டின் சில பகுதிகளில் இடிமுழக்கத்துடன் மழை பெய்யும் எனவும் மின்னல் தாக்குதலில் இருந்து தப்பிக்கொள்ள பொது மக்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுமாறும் காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் நாளை கடுங்காற்றுடன் மழைபெய்யும் எனவும் இடியுடன் கூடிய மழை சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், மேல் மாகாணம், மற்றும் தென்மாகாணங்களுக்கும் பரவும் எனவும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.