ஐ. தே. க உட்பூசல் வலுக்கிறது – மத்தும பண்டார விவகாரம் நாளை செயற்குழுவில் முடிவு

unp-logo.jpgஐ. தே. க.  பட்டியலில் இருந்து திஸ்ஸ குட்டியாரச்சியின் பெயர் நீக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக ஐ. தே. க மொனராகலை மாவட்ட முதன்மை வேட்பாளர் ரஞ்சித் மத்துகம பண்டாரவிடம் ஐ. தே. க. விளக்கம் கோரியுள்ளதாக கட்சி வட்டாரங்கள் கூறின. ஒன்பதாம் திகதிக்கு விளக்கமளிக்குமாறு கட்சி தலைமைப் பீடம் இவரை கேட்டுள்ளது. ஐ. தே. க. செயற்குழு நாளை (9) கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் சிறிகொத்தாவில் கூட உள்ளது.

இதன் போது மத்தும பண்டாரவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் கூறின. மத்தும பண்டாரவை மொனராகலை மாவட்ட முதன்மை வேட்பாளர் பதவியில் இருந்தும் மற்றும் பதவிகளில் இருந்தும் நீக்க உள்ளதாகவும் அறிய வருகிறது. இதேவேளை சு. க. மக்கள் பிரிவு சார்பாக நிறுத்தப்பட்ட திஸ்ஸ குட்டியாரச்சியை ஐ. தே. க. பட்டியலில் இருந்து திட்டமிட்டு நீக்கியதால் ஐ. தே. க. கூட்டுக் கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

கூட்டுக் கட்சிகளை திருப்தி ப்படுத்து வதற்காக கட்சியின் சிரே ஷ்ட உறுப் பினரான மத்தும பண்டாரவுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க தயாராவ தையடுத்து ஐ. தே. கவுக்குள்ளும் பிளவு ஏற்பட்டுள்ளதாக அறியவருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *