படகில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக காலி கடற்பரப்பில் தத்தளித்த 12 வெளி நாட்டவர்களை காலி கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். இந்தோனேசியாவுக்குச் சொந்தமான மேற்படி படகில் இலங்கைக் கடலில் வைத்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
படகிலிருந்தவர்கள் கடலில் தத்தளிப்பதை அவதானித்த காலி மீன் பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கடற்படையினரின் உதவியுடன் இவர்களை மீட்டுள்ளனர். மீட்கப்பட்ட வெளிநாட்டவர்க ளிடையே ஒரு தாய்லாந்து நாட்டவரும் 11 இந்தோனேசிய நாட்டவர்களும் அடங்குவதாக பொலிஸார் கூறினர். மீட்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நேற்று (2) காலி துறைமுக பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர்.