ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானாவை தனியாக பிரிப்பதில் உள்ள தாமதத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தின் போது தீக்குளித்த மாணவர் இறந்துவிட்டதாக ஐதரபாத் நகர போலீசார் கூறுகின்றனர்.
தெலுங்கானாவை தனி மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று கோரி நூற்றுக்கணக்கான மாணவர்கள் டிசம்பரில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர்.
வன்முறைகள் தொடர்ந்ததன் காரணமாக புதிய மாநிலத்ததை அமைக்கும் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. தகவல் தொழில்நுட்பம், மற்றும் மருந்து நிறுவனங்கள் பல அமைந்துள்ள ஐதராபாத் தெலுங்கானாவின் பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆர்பாட்டக்காரர்கள் விரும்புகின்றனர்