யெமெனில் பாதுகாப்புக்கு அச் சுறுத்தல் ஏற்படும் வகையில் நடந்து கொண்டோர் சிலரைப் பொலிஸார் கைது செய்தனர்.
இவர்கள் அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதுடன் அர சைக் கண்டிக்கும் துண்டுப் பிரசுரங்கள் பதாகைகளை வைத்திருந்தனர். ஷியா கிளிர்ச்சியாளர்களின் நடமாட்டமுள்ள நகரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. பாதுகாப்புப் படையினர் மீது கற்களை வீசி களேபரம் பண்ணிய 16 பேரையே பொலிஸார் கைது செய்தனர்.
அல்கைதாவின் தூண்டுதலில் இவர்கள் ஆர்ப்பாட்ட த்திலீடுபட்டதாக பொலிஸார் கூறினர். யெமென் ஷியா கிளர்ச்சியாளர்களுக்கும். யெமென் அரசுக்கு மிடையே அண்மையில் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது என்றாலும் இவை இன்னும் பூரணமாக அமுலுக்கு வரவில்லை. இதனால் இவ்வா றான கைதுகள் இடம்பெறுகின்றன. எனவே சர்வதேசம் இந்த ஒப்பந் தத்தைப் பயனுள்ளதாக்க முன்வர வேண்டுமெனக் கோரிக்கை விடப் பட்டுள்ளது.
யெமெனில் 2004ல் ஷியா முஸ்லிம்கள் போராட்டத்தை ஆரம்பித் தனர். இன்று வரை தொடரும் யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கானோர் பலியாகியும் இடம்பெயர்ந்து முள்ளனர். யெமெனப் புனரமைப்பதற்கான மாநாடு இம்மாதம் 27, 28ம் திகதிகளில் சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ளது.