சர்வதேச டென்னிசில் இந்த ஆண்டின் உலக சாம்பியன்களாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரும், பெண்கள் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்சும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் அறிவித்துள்ளது.
கிராண்ட்ஸ்லாம், மற்ற சர்வதேச போட்டிகள், டேவிஸ், பெட் கோப்பை டென்னிஸ் ஆகிய போட்டிகளில் வீரர், விராங்கனைகளின் செயல்பாட்டை கணக்கில் கொண்டு இந்த விருதுக்கு ஆண்டுதோறும் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
அமெரிக்க பகிரங்க அரை இறுதியின் போது லைன் பெண் நடுவரை மிரட்டி பெரும் தொகையை அபராதமாக இழந்த போதிலும் செரீனா 2-வது முறையாக இந்த விருதினை பெற்றிருக்கிறார். பெடரர் இந்த உயரிய விருதுக்கு தேர்வு செய்யப்படுவது இது 5-வது முறையாகும்.
‘களத்திலும் சரி, வெளியிலும் சரி இந்த ஆண்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமைந்தது. முதல் முறையாக பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றியது.
அதிக கிராண்ட்ஸ்லாம் வென்ற சாம்ப்ராசின் சாதனையை முறியடித்தது. மீண்டும் முதல் இடத்தை பிடித்தது எல்லாமே இந்த ஆண்டில் தான்’ என்று பெடரர் குறிப்பிட்டார்.