சரத் பொன்சேகா படை வீரர்களைக் காட்டிக் கொடுக்கும் வகையில் தெரிவித்த கூற்று தொடர்பில் எத்தகைய சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என அரசாங்கம் சட்ட மா அதிபரின் ஆலோசனையை கோரியுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். மகாவலி நிலையத்தில் நேற்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:-
சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பிரகாரம் இவருக்கு எதிராக அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுக்கும். இவர் தொடர்பாக சி. ஐ. டி. யினூடாக விசாரணை நடத்த சட்ட மா அதிபர் பணித்தால் அவரிடம் வாக்கு மூலம் பெற்று அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.