மு.கா. அதியுயர்பீட உறுப்பினர் உட்பட 7 முக்கியஸ்தர்கள் அரசுடன் இணைவு

மு. கா. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் காத்தான்குடி நகர சபைத் தலைவருமான மர்சூக் அகமது லெப்பை உட்பட மு. கா. வின் மட்டக்களப்பு மாவட்ட ஆறு உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ. தே. க. உறுப் பினர் ஒருவருமாக ஏழுபேர் நேற்று ஐ. ம. சு. மு.வில் இணைந்து கொண்டனர்.

மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிப்படுத்துவது தொடர்பாக ஆராயும் கூட்டத்தில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் எம். பி. முன்னிலையில் இவர்கள் இணைந்துகொண்டனர்.

மர்சூக் அகமது லெவ்வையுடன் மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் நாகூர்கான் றமழான், காத்தான்குடி நகர சபை மு. கா. உறுப்பினர் ஹயாத்து முகம்மது, வாழைச்சேனை பிரதேச சபை மு.கா. உறுப்பினர் அப்துல் றபீக், ஏறாவூர்பற்று பிரதேச சபை மு.கா. உறுப்பினர் அப்துல் வாஹித், ஏறாவூர் நகர பிரதேச சபை உறுப்பினர் ஜே. எம். பிர்தெளஸ், ஏறாவூர்பற்று பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் நந்தசிறி ஆகியோரே இணைந்து கொண்டவர்களாவர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *