மேல் மாகாணத்தின் வாக்காளர் இடாப்புகளில் கிட்டத்தட்ட 80 ஆயிரம் இரட்டை பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 60 ஆயிரம் இரட்டை பதிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 12 ஆயிரம் இரட்டை பதிவுகளும் களுத்துறை மாவட்டத்தில் 8000 இரட்டை பதிவுகளும் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டதாக திணைக்களம் மேலும் கூறியது.