கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் இராணுவம், கடற்படை, பொலிஸ் ஆகியன தனித்தனியே மேற்கொண்ட தேடுதலின்போது நேற்றைய தினம் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்கப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்புத் தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக் குடியிருப்புக் கிழக்கில் எட்டாம் அதிரடிப்படையும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது 20 கிலோ நிறைகொண்ட சி 4 வெடி பொருட்கள், 69 – நிலக்கண்ணி வெடிகள், 13 புலிகளினால் தயாரிக்கப்பட்ட குண்டுகள், 125 டெட்டனேட்டர்கள், 1231 – 5.56 ரவைகள் ஆகியன கைப்பற்றப் பட்டுள்ளன.
இதேவேளை, புதுக்குடியிருப்புக் கிழக்கில் இராணுவத்தினரும் கடற்படை யினரும் இணைந்து நடத்திய தேடுதலின் போது மேலும் ஒரு தொகுதி வெடிபொருட்களான ரி-81 ரக ஆயுதம், 03 கிலோகிராம் சி4 வெடிபொருட்கள், 400 – 12.7 ரக ரவைகள், 700 எம். பி. எம். ஜி. ரவைகள், 2.5, 5 மற்றும் 10 கிலோ நிறைகொண்ட மூன்று கிளேமோர்கள், 08 – “தமிழன்” கைக்குண்டுகள், 01 – எம். பி. எம். ஜி. இணைப்பு, 2000 – எம். பி. எம். ஜி. ரவைகள், 2250 – ரி – 56 ரக ரவைகள் ஆகியனவும் மீட்கப்பட்டு ள்ளன.
கிளிநொச்சி, அடம்பன் பகுதியில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஹேலோ ட்ரஸ்ட் அமைப்பு அப் பகுதியிலிருந்து ஒரு நிலக்கண்ணி வெடியினையும் இரணைமடுவிலிருந்து இராணுவத்தின் பொறியியல் பிரிவு ஏழு கண்ணி வெடிகளை கண்டுபிடித்திருப்ப தாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.