வவுனியா வடக்கு 8 பிரதேச செயலக பிரிவுகளில் 400 குடும்பங்கள் மீள்குடியேற்றம்

260909srilanka.jpgநிவாரண கிராமங்களில் உள்ள மக்கள் மேலும் 400 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அடுத்த வாரம் வவுனியா வடக்குப் பிரதேசங்களில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.

புளியங்குளம் வடக்கு மற்றும் தெற்கு, மன்னக்குளம், கனகராயன்குளம் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட எட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா வடக்கில் இன்னும் 20 பிரதேச செயலாளர் பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர்த்தப்படவுள் ளனர். இங்குட்டுப் பிரதேச செயலாளர் பிரிவுகளில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மீள்குடியேற்றத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும்,  இங்கு அரச அலுவலகங்கள் மீள இயங்கத் தொடங்கியுள்ளதுடன் கனகராயன் மகா வித்தியாலயம், புளியங்குளம் வித்தியாலயம் ஆகிய இரண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீளத் திறக்கப்படுமென்றும் அரச அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *