நிவாரணக் கிராமங்களில் உள்ளோர் சுதந்திரமாக வெளியே நடமாடலாம்.

வன்னி நிவாரணக்கிராமங்களில் உள்ள மக்கள் எதிர்வரும் டிசம்பர் 01ஆம் திகதி முதல் சுதந்திரமாக நடமாட அனுமதி வழங்கப்படுமென ஜனாதியின் சிரேஸ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஸ சற்று நேரத்துக்கு முன் மெனிக் பாம் நிவாரண முகாமில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய மேற்படி முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்பு அனைவரும் முகாம்களிலிருந்து சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 Comments

  • Saturn
    Saturn

    யாழ்பாணத்தில் இருந்து சுதந்திரமாக அனுமதி இன்றி பயணம் செய்யலாம்.
    தமிழ் கூத்தமைப்பு அங்கத்தவர்கள் முகாம்களை பார்வை இடலாம்.
    கூத்தமைப்பு தலைவர்களும், ஏனைய தரகர்களும் Zurich இல் ஒரு உடன்பாட்டிற்கு வரலாம்.
    முகாம்கள் அனைத்தும் மூடப்பட்டு மக்கள் மீண்டும் குடியமர்த்த படலாம்.
    பொன்சேகா இன்னும் ஒருமுறை அமெரிக்கா சென்று வந்தால், சில வேளைகளில் பொட்டனின் மாவீரர் பேச்சு இல்லாமலே தமிழ் ஈழமும் கிடைக்கலாம்.
    இன்னும் பல அதிசயங்கள் நடக்கலாம்

    என்ன இருந்தாலும் இராசபக்ச சகோதரர்களின் கொண்டாட்டம் தற்போதைய வடிவத்தில் தொடர முடியாது. பிரபாகரனை முள்ளி வாய்காலில் பாதுகாக்க சில சக்திகளுக்கு விருப்பம் இருந்தும் முடியவில்லை. இராசபக்ச நிறுவனத்தின் எதிர்காலம் Zurich இல் எடுக்கும் முடிவுகளில் மட்டும் தங்கியிருக்கவில்லை

    Reply
  • palli
    palli

    சற்ரேன் நியாயமாகதான் சொல்லுறியள், ஆனா மகிந்தாபற்றி பேசினாலே மல்லுக்கெல்லவா வருகிறார்கள்; இலங்கை மகிந்தாவின் சொக்குபாட்டியின் அசையா சொத்துபோல் ஆகிவிட்டதோ என கூட சில வேளைகளில் எண்ண தோன்றுகிறது; சூரிச் எல்லாம் சும்மா சும்மா;;;;;;;;;;

    Reply
  • VS
    VS

    இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தும் செயற்பாடு அரசியல் அரங்கில் அதிகம் பேசப்படும் விட யமாக இன்றுவரை இருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரத்தில் எதிரணிக் கட்சிகள் இடம்பெயர்ந்தோர் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிப்பதை அண்மைக் காலமாக அவதானிக்க முடிகின்றது.

    இடம் பெயர்ந்தவர்களை இப்போதைக்கு மீளக் குடியமர்த்தக் கூடாது என்று சில மாதங்களுக்கு முன்கூறிய ஒரு பிரமுகர் இப்போது எதிரணி அரசியலில் சங்கமிக்கத் தொடங்கியதும் மீள்குடியேற்றம் திருப்திகரமான முறையில் நடைபெறவில்லை என்று அரசாங்கத்தின் மீது கணை தொடுத்த வேடிக்கையையும் அண்மையில் பார்த்தோம்.

    நாய்கள் எவ்வளவுதான் குரைத்தாலும் ஊர்தி நகரும் என்பது போல எதிரணியினர் அரசியல் நோக்கத்துடன் செய்யும் பிரசாரங்களுக்கு மத்தியில் அரசாங்கம் தனது பொறுப்பைச் சரியான முறையில் நிறைவேற்றியது. இடம்பெயர்ந்த மக்களுக்கு நல்வாழ்வை அளிக்க வேண்டியது தனது பொறுப்பு என்று ஜனாதிபதி கூறியதை நடைமுறைப்படுத்தும் விதத்தில் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.

    நிவாரணக் கிராமங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு வேண்டிய சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மிகத் துரிதமாக நடைபெறுகின்றது. நிவாரணக் கிராமங்களிலுள்ள வசதிகள் பற்றியும் மீள் குடியேற்றம் பற்றியும் அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தடவை அப்பகுதிகளுக்குச் சென்று வந்தபின் திருப்தி தெரிவித்தது மாத்திரமன்றி அரசாங்கத்துக்கு நன்றியும் தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றி வருகின்றது.

    ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினரும் வடக்கு அபிவிருத்திச் செயற்பாடுகளுக்குப் பொறுப்பானவருமான பசில் ராஜபக்ஷ நேற்று வெளியிட்ட அறிவித்தல் இடம்பெயர்ந்த மக்களை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும்.

    இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான பல்வேறு விடயங்களையிட்டு அவர் முக்கியமான அறிவித்தலைச் செய்திருக்கின்றார்.நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்களின் நடமாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் முற்றாக நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் தங்கள் சொந்த வீடுகளில் வசிப்பவர்கள் போல எந்த நேரத்திலும் எங்கும் சென்று வரலாம். இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் ஜனவரி 31ந் திகதிக்கு முன் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றப்பட்டுவிடுவர்.

    அது வரையில் நிவாரணக் கிராமங்களில் தங்கியிருப்பவர்கள் வழமைபோல எல்லா வசதிகளையும் பெறுவர். மீளக் குடியேற்றப்பட்டவர்களுக்கு இதுவரை வழங்கிய இருபத்தையாயிரம் ரூபா கொடுப்பனவு ஐம்பதாயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மீள்குடியேற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட கூரைத்தகடு போன்ற பொருட்களும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளன. உலகின் பல நாடுகளில் மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். ஆபிரிக்க நாடுகளில் உள்நாட்டு மோதல்கள் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்திருக்கின்றார்கள்.

    அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இடம்பெயர்ந்திருக்கின்றார்கள். இலங்கையில் இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேற்றப்படும் அளவு துரிதமாக வேறெந்த நாட்டிலும் மீள் குடியேற்றம் இடம் பெறவில்லை.

    இலங்கையில் இடம்பெயர்ந்த மக்களுக்குக் கிடைக்கும் வசதிகள் மற்றும் கொடுப்பனவுகள் போல வேறெந்த நாட்டிலும் இல்லை. இடம்பெயர்ந்தோருக்கான வசதிகள் மற்றும் மீள்குடியேற்றத்தைப் பொறுத்தவரையில் இலங்கை வரலாறு படைத்திருக்கின்றது.

    Reply