ஊழியர் சேம இலாப நிதியத்திற்கென தனியான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதால் ஊழியர் சேமலாப நிதியினைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள் தத்தமது மாவட்டக் காரியாலயங்களில் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு தொழிலமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.
ஊழியர் சேமலாப நிதிய அலுவலகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும் பின்னர் அது நாரஹேன்பிட்டியிலும் இயங்கி வந்ததுடன் தற்போது தற்காலிக மாகத் தொழிலமைச்சில் சிறிய தொரு பிரிவில் இயங்கி வருகிறது.புதிய கட்டட நிர்மாணம் முடியும் வரை மாவட்ட அலுவலகங்களில் நமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.