பன்றிக் காய்ச்சல் – மத்திய மாகாண பாடசாலைகள் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி பூட்டு.

influenza-a.jpgஇதுவரை  பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த  இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ்  இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது.  இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக  கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர்  நவம்பர் 04, 2009ஆம் திகதி  உயிரிழந்தார்.

தற்போது 10 பேர் அளவில், ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.  இதையடுத்து,  மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாணத்திலுள்ள 1470 பாடசாலைகளையும் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *