முப்படை வீரர்களுக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிதி அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
அதன்படி குறிப்பிட்ட சில பிரதேசங்களில் கடமையாற்றும் படை வீரர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த 80 ரூபா முதல் 100 ரூபா வரையிலான நாளாந்த விசேட கொடுப்பனவுத் தொகை ஏனைய படைவீரர்கள் அனைவருக்கும் வழங்கப்படவுள்ளது.
இதேவேளை முப்படை அதிகாரிகள் அனைவருக்கும் மாதந்தம் 1000 ரூபா விசேட மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளது. மேலும் அரச சேவையிலுள்ள அனைவருக்கும் வாழ்க்கைச் செலவு கொடுப்னவாக ஒரு மாதத்துக்கு 750 ரூபாவையும் ஓய்வுபெற்றவர்களுக்கு 375 ரூபாவையும் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேற் கூறப்பட்ட கொடுப்பனவுகள் 2009 நவம்பர் முதல் அமுலுக்கு வருவதுடன் 2010 ஜனவரி முதல் வழங்குவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.