ஜோன் ஹோம்ஸ் வவுனியா சென்று திரும்பியுள்ளார்

johnholmesvavuniya.jpgஐ.நா.  மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸ் நேற்று வவுனியா நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். இதன் போது அவர் மீள்குடியேற்றம் தொடர்பாக தமது திருப்தியை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்த அவர் நேற்று விசேட விமானம் மூலம் அங்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டார்.

கதிர்காமர், அருணாசலம், ஆனந்த குமாரசாமி ஆகிய நிவாரணக் கிராமங்களுக்குச் சென்ற அவரை, வவுனியா அரசாங்க அதிபர் திருமதி பி. எஸ். எம். சார்ள்ஸ் வன்னி பாதுகாப்பு படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன ஆகியோர் வரவேற்றனர். இதன் பின்னர் கொழும்பு திரும்பிய அவர் மாலை வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித்த போகல்லாகமையை சந்தித்து உரையாடினார். இன்றைய தினம் அவர் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *