யாழ்ப்பாண பல்கலைக்கழத்தின் பட்டப் பின்படிப்பு கல்விப் பீடத்துக்கு புதிய கட்டடம் ஒன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
அதன்படி 42.35 மில்லியன் ரூபா செலவில் 600 சதுர மீற்றர் பரப்பளவில் இதற்கான மூன்று மாடிக் கட்டடம் அமைக்கப்படவுள்ளது.தற்போது இந்தப் பீடத்தில் சுமார் 600 மாணவர்கள் பட்டப் பின்படிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.