சற்றுலாத்துறை அமைச்சர் நந்தன குணதிலக்க சபைக்குள் அவரது ஆசனத்தில் அமர்ந்திருக்கும் போது திடீரென சுகயீனமுற்று சிறிது நேரம் அவதிப்பட்டார்.
நேற்று சபைக்குள் விவாதம் நடைபெற்றும் கொண்டிருந்த போது அமைச்சர் நந்தன குணதிலக்க தமது ஆசனத்தில் அமர்ந்தவாறு அவதானித்துக் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அமைச்சர் தனது நெஞ்சை கையால் அழுத்திப் பிடித்துக் கண்களை மூடிக் கொண்டு அவதிப்பட்டார். அருகிலிருந்த அமைச்சர் சாலிந்த திசாநாயக்க அமைச்சரின் நெஞ்சை தடவிக் கொடுத்தார். அருகில் வெறுமையாக இருந்த ஆசனத்தி ற்கு வந்த அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியும் அமைச்சருக்கு பாராளு மன்ற உதவியாளர் ஊடாக வெந்நீர் குடிக்கக் கொடுத்தார்.
அதன் பின்னர் நந்தன குணதிலக்க நெற்றிப்பொட்டை விரல்களால் அழுத்திப் பிடித்தபடி அமர்ந்திருந்தார். அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி சபைக்கு வெளியே சென்று பாராளுமன்ற நெறியாளர்களை அழைத்து வந்து அமைச்சர் நந்தன குணதிலக்கவை சபைக்கு வெளியே அழைத்துச் சென்றார்.