கட்டுவான பிரதேசத்தைச் சேர்ந்த 45 மாணவர்கள் நேற்று திடீரென உடல் உபாதைக்கு உள்ளாகி மயக்கமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்றுக்காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.
தங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த கட்டுவான அம்பகாஹேன மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே உடல் உபாதைக்கு உள்ளாகி மயங்கி விழுந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.