அகதி அந்தஸ்து நிராகரிக்கப்பட்டோரை அவுஸ்திரேலியா பொறுப்பேற்கவேண்டும் இந்தோனேசியா அறிவிப்பு

Oceanic_Viking_Refugeesஅவுஸ்தி ரேலியாவின் சுங்கப் பிரிவுக்கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலிருந்து இந்தோனேசிய கரைக்கு வந்துள்ள 22 இலங்கையரும் தங்களது நாட்டில் 3 மாதங்கள் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிகாரி ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். அவர்களின் அகதி அந்தஸ்தை தீர்மானிக்கும் நடவடிக்கைகளுக்காக 4 வாரங்களிலிருந்து ஆகக்கூடியது 2 வாரங்களுக்கு அவர்கள் இந்தோனேசியாவில் தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர்.அதன்பின் அவர்கள் வெளியேறுவது அவசியம் என்று இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சுப் பேச்சாளர் தீகு பைசாசியா ஏ.எவ்.பி. செய்திச்சேவைக்கு கூறினார்.

இந்தோனேசிய கடற்பரப்பில் கடந்த மாதம் இடைமறிக்கப்பட்ட அவுஸ்திரேலிய கப்பலான ஓசனிக் வைக்கிங்கிலுள்ள புகலிடம் கோரும் 78 இலங்கையரும் இந்தோனேசியாவின் தன்ஜுங் பினாங்கிலுள்ள தடுப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு இணங்கியதாக வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகியிருந்தன.

நான்கு தொடக்கம் 6 வாரங்களுக்கிடையில் அவர்களை அவுஸ்திரேலியாவில் மீளக்குடியமர்த்துவதென்ற உறுதிமொழியை அடுத்தே அவர்கள் இந்தோனேசியாவுக்குச் செல்ல இணங்கியிருந்தனர். இந்த இலங்கையரில் ஏற்கனவே யூ.என்.எச்.சி.ஆரினால் அகதிகளென ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் நான்கு வாரங்களில் மற்றொரு நாடொன்றில் மீளக் குடியமர்த்தப்படுவர் என்று இந்தோனேசியாவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் திரியோனோ வியோபோ சனிக்கிழமை கூறியுள்ளார். அகதி அந்தஸ்தைப் பெற்றுக்கொள்ளத் தவறுவோரை இந்தோனேசிய கடற்பரப்பிலிருந்து அவுஸ்திரேலியா திரும்ப பொறுப்பேற்க வேண்டும் அல்லது அவர்களின் சொந்த நாட்டுக்கு நாடு கடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.தற்போது ஓசனிக் வைக்கிங் கப்பலில் 56 பேர் தங்கியுள்ளனர். அவர்களை இந்தோனேசியாவுக்குள் செல்லுமாறு அவுஸ்திரேலியா தூண்டி வருகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *