வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஐந்து வயது குழந்தையை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்து படுகொலை செய்த சம்பவமொன்று வென்னப்புவ பொலிஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது.குழந்தையின் தந்தையுடன் கூலித் தொழிலுக்கு செல்லும் நபரே இந்த படுகொலையை செய்துள்ளார். சந்தேக நபரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால தெற்கு பகுதியில் வசிக்கும் குழந்தையின் தந்தையும் சந்தேக நபரும் ஆற்றில் மணல் அள்ளும் கூலித் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளனர். சம்பவ தினம் மாலை குழந்தையின் தந்தையும், தங்கொட்டுவ பகுதியைச் சேர்ந்த சந்தேக நபரும் வைக்கால இல்லத்துக்கு வந்துள்ளனர். இருவரும் மது அருந்திய நிலையில் வீட்டில் இருந்துள்ளனர்.
இந்நிலையில் சந்தேக நபர் நேற்று முன்தினம் மாலை 6.00 மணியளவில் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை தந்தைக்கு தெரியாமல் தங்கொட்டுவ வீட்டிற்கு கடத்திச் சென்றுள்ளார். அங்கு குழந்தையை கொடூரமான முறையில் துஷ்பிரயோகம் செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்ததுடன் உடலை ரயில் பாதையருகே வீசியுள்ளார்.