மியன்மார் இராணுவ உயர்தலைவரின், இலங்கை விஜயத்தை கண்டித்து இன்று இலங்கையின் தலைநகர் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டம், நடத்தப்பட்டது. இடதுசாரி கட்சிகள் உட்பட்ட சமூக அமைப்புகள் இதனை ஏற்பாடு செய்திருந்தன. மியன்மாரில் ஜனநாயக உரிமைகளை பேணுமாறு கோரி, இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் கோசங்களை எழுப்பினர்.