சர்வதேச நாணய நிதியம் 329.4 மில். அமெ. டொலர் கடன் வழங்கத் தீர்மானம்

images-ims.jpgஇலங் கையின் பொருளாதாரத்தை மீளமைக்கும் பொருட்டு தமது இரண்டாம் கட்ட நிதியுதவியை வழங்க சர்வதேச நாணய நிதியம் தீர்மனித்துள்ளது. இது தொடர்பான அறிவித்தல் நேற்று வாஷிங்டனில் வெளியாகியுள்ளது.

இதன்படி இலங்கைக்கு 329 .4 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளது. நிலையான இரண்டாம் கட்ட கடன்தொகை ஏற்பாடான 658.8 மில்லியன் டொலரின் கீழேயே இந்த தொகை வழங்கப்பட்டுள்ளதாக, சர்வதேச நாணய நிதியத்தின் உதவி முகாமைப் பணிப்பாளர், டொகாடோசி காடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அண்மைக்கால பொருளாதார வளர்ச்சிப் போக்கு திருப்திகரமாக உள்ளது. அவசியமான மீளமைப்பு திட்டங்கள் உரிய வகையில் பின்பற்றப்பட்டுள்ளன. இதன் அடிப்படையிலேயே இந்த தொகையை வழங்கத் தாம் இணங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *