கிழக்கு முதல்வரின் ஜீப் மரத்தில் மோதி விபத்து மெய்ப்பாதுகாவலர் இருவர் உட்பட மூவர் பலி

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் ஜீப் வண்டி விபத்துக்குள்ளானதில் அவரது பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த இரண்டு இராணுவ வீரர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்று மொருவர் காயமடைந்துள்ளார்.

குருநாகல், கொக்கரல்ல தியநுரு பிரதேசத்தில் நேற்று அதிகாலை இந்த விபத்துச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிமல் மெதிவக்க தெரிவித்தார்.

இந்த விபத்தின் போது முதலமைச்சர் வாகனத்தில் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

முதலமைச்சரின் குண்டு துளைக்காத “லேன்ட் ரோவர்” ரக கறுப்பு நிற வாகனம் பழுதடைந்துள்ளது. அதனை பழுதுபார்ப்பதற்காக முதலமைச்சரின் பாதுகாவலர்களும், சிவிலியன் ஒருவரும் திருகோண மலையிலிருந்து கொழும்புக்கு எடுத்து வந்துள்ளனர்.

வாகனம் கட்டுப்பாட்டையிழந்து வீதியை விட்டு விலகி பாரிய மரம் ஒன்றில் மிகவும் வேகமாக மோதியதாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளது.

காயமடைந்தவர் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *