புராதன கால மனித குடியிருப்புகளின் எச்சங்கள் வடமராட்சியில் – தொல்பொருளியல் துறையின் இயக்குநர் தகவல்

161009artifact_jaffna.jpgபுராதன காலத்தில் மனித குடியிருப்புகளின் எச்சங்கள் வடமராட்சியின் கிழக்கு பகுதியில் தோண்டியெடுக்கப் பட்டுள்ளதாக தொல்பொருளியல் துறையின் இயக்குநர் டாக்டர் செனரத் திஸ்ஸநாயக்க தெரிவித்துள்ளார்

அங்கு மூன்று மனித குடியிருப்புகள் இருந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் அந்த குடியிருப்புகள் சுமார் 3 கிலோமீற்றர் தூரத்துக்கு  பரந்திருந்ததாகவும் இந்த சான்றுகள் யாழ் குடாநாட்டில் வரலாற்றுப் பின்னணியை நிரூபிப்பதற்கு மிக முக்கிய சான்றுகள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும் அங்கு நேரசட்டங்களை வேறுபட்ட நிறங்களில் ஓவியமாக தீட்டியிருந்த களிமண் பானைகள் கண்டெடுக்கப் பட்டுள்ளன எனவே இவற்றைக் கொண்டு எந்த சகாப்தத்தில் அக்குடியிருப்புகள் இருந்தன என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

கி.மு. ஆரம்பத்திலிருந்து கி.மு 900ஆண்டு காலப்பகுதியில் இக்குடியிருப்புகள் இருந்துள்ளன எனத் தாம் நம்புவதாகவும் ஆனால் மிகச்சரியாக இதைக் கூறமுடியாது என்றும் இயக்குநர் கூறியுள்ளார். 

யாழ்குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியின் போது பெரிய பெரிய மாடங்களின் எச்சங்கள் கிடைத்துள்ளதாக கூறினார்  இங்கு கிடைத்தசான்றுகளின்படி யாழ் குடாநாட்டில் மிகப்பழைய குடியிருப்புகள் இங்கேயே இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்

வல்லிபுர தங்க காகிதச் சுருள்களும் யாழ்குடாநாட்டின் வரலாற்றைத் தீர்மானிக்க உதவுகின்றதாகவும் அது 2ம் நூற்றாண்டுக்குரியது என்றும் தெரிகிறது மேலும் ராஜாக்களின் மாளிகை மற்றும் அதன் தடாகத்தையும்கூட கண்டு பிடித்துள்ளனர் மேலும் மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதிகளிலும் இதுபோன்ற சான்றுகள் கிடைக்கும் என தாம் நம்புவதாகவும் தொல்பொருளியல் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *