மக்கள் வழங்கிய ஆதரவே எமது நாட்டின் வெற்றிக்குக் காரணம்! எட்டாவது ஆசிய ஒத்துழைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் ஜனாதிபதி

290909mahinda.jpg பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும் சிறந்ததொரு முன்னுதாரணமென நாம் நம்புகின்றோம். பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் எமக்கு உலகின் நட்புநாடுகளின் ஆதரவு கிடைத்ததைப் போன்று மிகப் பிரதானமாக எமது வெற்றிக்கு எமது மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் தான் காரணம்.

இதன் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டைப் பற்றி நன்கு தெரிந்த பிரிவினர்களால் மட்டுமே அதாவது அந்த நாட்டு மக்களால் தான் தீர்க்க முடியும் என்பது தெளிவாகின்றது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (15) காலை கொழும்பில் நடைபெற்ற 8ஆவது ஆசிய ஒத்துழைப்பு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு ஆரம்ப உரையாற்றும்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி  இங்கு மேலும் தெரிவித்ததாவது:-

உங்கள் எல்லோரையும் எமது இலங்கை நாட்டுக்கு நான் பெருமகிழ்ச்சியுடன் வரவேற்கின்றேன். இம்முக்கியமான நிகழ்வில் கலந்து கொள்வதற்காக ஆசிய பிராந்திய நாடுகளின் நண்பர்கள் இங்கு ஒன்றுகூடியிருப்பதையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். எம் எல்லோருக்கும் சொந்தமான இந்த ஆசியப் பிராந்தியத்திற்கு பல்லினத் தன்மை கொண்ட மிகச் சிறந்ததொரு வரலாற்றுப் பாரம்பரியம் உள்ளது. உலகின் பிரதான சமயங்களான பௌத்தம், இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய நான்கு சமயங்களும் ஆசியாவிலேயே தோற்றம் பெற்றன. பல்வேறு நாகரீகங்கள் செளித்துவளர்ந்த பூமியும் இதுவே.

கடந்த பல நூற்றாண்டுகளாக எமக்கிடையே மிக நெருங்கிய தொடர்புகள் இருந்துவருகின்றது. பட்டுப் பாதை எம்மை ஐரோப்பாவுடன் இணைத்தது. இப்பாதையூடாகவே இலங்கையின் வாசனைத்திரவியங்களது மனம் ஐரோப்பா வரைச் சென்றடைந்தது.

தூர கிழக்கு நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள்; வியாபார நோக்கத்தில் எமது நாட்டிற்கு வருகை தந்தனர். எனவே ஆசிய கூட்டுறவு என்ற எண்ணக்கரு ஏற்கெனவே ஆசிய நாடுகள் மத்தியில் இருந்துவந்த கூட்டுறவை மீள கட்டியெழுப்புவதற்கு மிக முக்கியமானதொரு பொறிமுறையாகும். மேலும் இந்த எட்டாவது ஆசிய கூட்டுறவு கலந்துரையாடல் அமைச்சரவை கூட்டம் ஆசியாவின் எழுச்சி – உலகளாவிய பொருளாதார மீற்சியும் அபிவிருத்தி வளவாய்ப்புக்களும் என்ற தொனிப்பொருளில் நடைபெறுவது மிகவும் பொருத்தமாகும்.

உலக சனத்தொகையில் ஆசியா 60 சதவீதத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது. துரிதமாக வளர்ந்துவரும் மத்தியதர வர்க்கத்தின் காரணமாக அது உலகின் மிகப்பெரும்பாலன சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது. நேரடி சர்வதேச முதலீடுகள் பல ஆசியாவுக்கு உரித்தானதாகும். உலக உற்பத்தியில் ஆசியாவின் பங்களிப்பு 30 சதவீதமாகும். மேலும் இப்பிரதேசம் அதிகளவான இயற்கை வளங்களையும் கொண்டுள்ளது. இவை எமது வெற்றியினதும் புதிய பலத்தினதும் எதிர்பார்ப்பாகும்.

இவையெல்லாவற்றுக்கும் அப்பால் நாம் எதிர்நோக்குகின்ற பல பிரச்சினைகளையும் மறந்துவிட முடியாது. குறிப்பாக உலக பொருளாதாரம் கடந்த சில தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு மிகப்பாரியதொரு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இதன் மூலம் ஏற்றுமதியில் தங்கியிருக்கும் பொருளாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் சாதாரணமானவையல்ல.

இது ஆசியப் பிராந்தியத்திற்கு வெளியில் உள்ள சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட நெருக்கடியாகும். அவர்கள் ஏற்படுத்திய பிரச்சினை என்பதால் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதில் அவர்கள் எமக்கு உதவவேண்டும். மேற்கின் பிரதான நாடுகளின் பலவீனமான சட்டநடைமுறைகளாலும் பேராசையினாலும் ஆசிய நாடுகளும் உலகின் ஏனைய நாடுகளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றன. எனவே இச் சவாலுக்கு புதிய பரிகாரங்களைத் தேட வேண்டும்.

இச்சவாலை நாம் எமது பிராந்தியத்திற்கிடையே வர்த்தக விரிவாக்கத்தை மேற்கொள்வதற்கும் எமது நிதிச்சந்தைகளில் செல்வாக்குச் செலுத்துவதற்குமான ஒரு சந்தர்ப்பமாக மாற்றியமைக்க வேண்டும். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் உலக பொருளாதாரத்தை நல்லநிலைக்குக் கொண்டுவருவதற்கு எமது போட்டித்தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நாம் ஏனைய பிராந்தியங்களோடு பெறுமதியான கூட்டு ஒத்துழைப்பைக் கட்டியெழுப்புவதற்கும் உதவும்.

எமது பிராந்தியத்தில் தாக்கம் செலுத்தும் மற்றுமொரு பிரச்சினைதான் வறுமை. எமது மக்களின் குறிப்பிடத்தக்க ஒரு பிரிவினர் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் தாழ்;ந்த நிலையில் உள்ளனர். ஆசிய ஒத்துழைப்புக் கலந்துரையாடலின் நோக்கங்களில் ஒன்று வறுமை ஒழிப்பும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதுமாகும் என்றவகையில் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பது எமது பொறுப்பாகும்.

கீழ் மட்டங்களில் வெற்றியளித்த முறைமைகளை மிகவும் கவனமாக ஆய்வு செய்வதன் மூலம் இது சாத்தியமாகும். நாம் எமது பிராந்தியத்திற்குள் எமது சொந்த அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறையவுள்ளன. அந்தவகையில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம் இதற்கு சிறந்த உதாரணமாகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

சர்வதேச நிதி நிறுவனங்களின் புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் மிக முக்கியமானது என்பதனைக் குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலுமுள்ள வறுமைநிலை, ஒவ்வொரு நாட்டுக்குமான தேவைப்பாடுகள், குறிகாட்டிகள் சமனான வேறுபட்ட தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் ஒரேவகையான தீர்வைக் கொடுக்க முடியாது.

எமக்கு உதவி செய்ய நினைப்பவர்கள் இதனை மனதில் கொள்ள வேண்டும். சர்வதேச நிதி நிறுவனங்கள் எமது பிராந்தியத்தில் மிகக்கூடிய செல்வாக்கைக் கொண்டுள்ளன. உதவி வழங்குவதற்காக அவர்கள் முன்வைக்கும் நிபந்தனைகள் மூலம் ஏற்படும் சுமைகள் பற்றி அவர்கள் மிகுந்த கரிசணை செலுத்த வேண்டும்.

வறுமை ஒழிப்பு அத்தகைய நிபந்தனைகளுக்கான கைமாறாக இடம்பெறக்கூடாது. அபிவிருத்திப் பொருளாதாரத்தினூடாக அவர்களுக்கு வழங்கும் உதவிகளின் மூலம் ஏற்படும் நிலைமைகளை இந்த நிறுவனங்கள் விலங்கிக் கொள்ள வேண்டும். அதேபோன்று அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கும்போது பொருளாதார அபிவிருத்தியில் அவர்கள் முகங்கொடுக்கும் சவால்களுக்கு விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.

அதேபோன்று இலங்கையின் சொந்த அனுபவங்களை நான் பகிர்ந்துகொள்வதானால் எனது அரசாங்கத்தின் அபிவிருத்திச் சட்டகம் நான் 2005 ஆம் ஆண்டு சனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டபோது முன்வைத்த ‘மஹிந்த சிந்தனை’ என்ற எனது தேர்தல் விஞ்ஞாபனத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.

கிராமிய பொருளாதார அபிவிருத்தியும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான உதவியும் எமது கொள்கையின் பிரதான அம்சங்களாகும். இதில் சமநிலைத்தன்மையும் நவீன முறைமைகளை ஏற்படுத்துவதனூடாகவும் நாட்டின் தேசிய திட்டங்களுக்கு உதவிசெய்யும் அதேநேரம் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதன் மூலமும் இது முன்னெடுக்கப்படுகின்றது.

கடந்த இரண்டரைத் தசாப்தகாலமாக இலங்கைக்கு மிகவும் சவாலாக அமைந்த பிரச்சினை பல்வேறு தடைகளுக்கு மத்தியில் அதன் இறைமை மற்றும் ஆள்புல எல்லையைப் பாதுகாப்பதாகும். எமது நாட்டையும் எமது மக்களையும் பாதுகாப்பதில் நாம் பெரும் கவனம் செலுத்த வேண்டியிருந்தது.

1948 ஆம் ஆண்டு எமது நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டிருந்த முன்னேற்றம் பயங்கரவாதப் பிரச்சினையின் காரணமாக பின்நோக்கிச் செல்லலானது. இலங்கைக்கு அதன் கீர்த்தியை வெற்றி கொள்வதற்காக பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட வேண்டியிருந்தது. எனவே எனது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த மிகமுக்கியமான தீர்மானம் இதுவாகும். என்றாலும் அதனைச் செய்யுமுன்னர் நாம் சமாதானமாக இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எல்லா வழிகளையும் தேடினோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி சர்வதேச சமூகத்தில் சில பிரிவினர் ஒருபோதும் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டபோதும் நாம் பயங்கரவாதத்தை வெற்றி கொண்டோம். என்றாலும் இவ்வெற்றி எல்லா விடயங்களையும் கருத்திற்கொள்ளாது பெற்ற வெற்றியல்ல. பயங்கரவாதிகள் மக்களை பணயக்கைதிகளாக வைத்திருந்த சந்தர்ப்பத்தில் அப்பாவி மக்களைப் பாதுகாப்பதிலும் அவர்களது நலன்களிலும் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

ஜனநாயக ரீதியாக ஆட்சிக்கு வந்த அரசாங்கம் என்ற ரீதியில் பொதுமக்களை பயங்கரவாதிகளிடமிருந்து விடுவிக்க வேண்டிய மிக முக்கியமானதொரு பொறுப்பு எமக்கிருந்தது. இதற்கு பொறுமையோடு நீண்டகால யுத்த நடவடிக்கையொன்று அவசியமானது. இது நான் நன்கு சிந்தித்து எடுத்த முடிவாகும். எல்லா இலங்கையர்களையும் இன, மத, மொழி, பேதங்களை மறந்து ஒரே வகையில் கவனிப்பதற்கு எனது அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணத்தோடு செயற்பட்டது. இதனால் தான் பயங்கரவாதம் மிக மோசமாக இருந்தபோதும் இராணுவத்தினரது மானசீக நடவடிக்கைகளின்போது பொதுமக்களது பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நாட்டின் சில பிரதேசங்களில் செல்வாக்குச் செலுத்திய மோதல் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தமை தாய் நாட்டின் எழுச்சிக்கு காரணமாய் அமைந்துள்ளது. எனது அரசாங்கம் தற்போது பயங்கரவாதிகளால் சேதமாக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பொருளாதார அபிவிருத்திக்கும் பாடுபட்டுவருகின்றது. மேலும் நாம் மனித உரிமைகள் மற்றும் ஏனைய அடிப்படை உரிமைகளை எமது மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்தவருகிறோம்.

பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருப்பது சர்வதேச சமூகத்திற்கும் சிறந்ததொரு முன்னுதாரணமென நாம் நம்புகின்றோம். எமக்கு உலகின் நட்புநாடுகளின் ஆதரவு கிடைத்ததைப்போன்று மிகப் பிரதானமாக எமது வெற்றிக்கு எமது மக்கள் வழங்கிய ஆதரவும் ஒத்துழைப்பும் தான் காரணம். இதன் மூலம் ஒரு நாட்டின் பிரச்சினையை அந்த நாட்டைப் பற்றி நன்கு தெரிந்த பிரிவினர்களால் மட்டுமே அதாவது அந்த நாட்டு மக்களால் தான் தீர்க்க முடியும் என்பது தெளிவாகின்றது.

எமது நாட்டின் மோதலுக்குப் பிந்திய சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நான் ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன். எல்லோரதும் அபிலாஷைகளைப் போன்று ஆசிய நாட்டவர்கள் என்றவகையில் எமது நோக்கமும் கூட்டு ஒத்துழைப்பின் மூலம் எதிர்கால சமாதானத்தையும் அபிவிருத்தியையும் கட்டியெழுப்புவதாகும்.

கடைசியாக ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு மிக விரிந்த அரசியல் பார்வையொன்று அவசியமாகும் என்பதை நான் இந்த இடத்தில் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன். இதற்காக அரச மட்டத்தில் அல்லது அரச தலைவர்கள் மட்டத்தில் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட வேண்டுமென நான் முன்மொழிகின்றேன்.

நடப்பு வருடத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கைக்கு வழங்குவதற்கு இலங்கை மீது கொண்ட விசுவாசத்திற்காக நான் ஆசிய ஒத்துழைப்பு நாடுகளுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒத்துழைப்பு மற்றும் கலந்துரையாடல் மூலம் ஒருமித்து முடிவுகளை மேற்கொண்டு எமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நாம் எம்மாலான முயற்சிகளை எடுப்போம் என்றும் ஜனாதிபதி கூறினார்

Show More
Leave a Reply to பல்லி Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

4 Comments

  • appu hammy
    appu hammy

    When we borrowed finance from those bodies during past years, we agreed their conditions. So they have the right to verify that. If you don’t accept, they won’t give money. We need money without interest, without conditions and without time limitations. Even your brothers won’t give the money under those conditions

    Reply
  • பல்லி
    பல்லி

    அதே மக்களைதானே நீங்கள் சிறையில் அடைத்து அழகு பாக்கிறியள்;

    Reply
  • santhanam
    santhanam

    /அதே மக்களைதானே நீங்கள் சிறையில் அடைத்து அழகு பாக்கிறியள்//
    இதை புலிகள் லஞ்சம் கருணா வடக்குகிழக்கு நிர்வாகம் என்று பக்சேகுடும்பம் காதில் புலிகளின் அரசியல் துறைக்கு சுத்தும் போது பல்லி யோசித்திருக்க வேண்டும்.

    Reply
  • பல்லி
    பல்லி

    //இதை புலிகள் லஞ்சம் கருணா வடக்குகிழக்கு நிர்வாகம் என்று பக்சேகுடும்பம் காதில் புலிகளின் அரசியல் துறைக்கு சுத்தும் போது பல்லி யோசித்திருக்க வேண்டும்.//
    தயவு செய்து இதை யாரும் தமிழில் மொழிபெயர்ப்பு செய்யவும்;
    பல்லிக்கு தமிழ் அவ்வளவாக வராது,

    Reply