இலங்கைக் கான பயண எச்சரிக்கையைப் பிரித்தானியா தளர்த்தியுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார மற்றும் பொதுநலவாய திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கை விஜயங்கள் ஆபத்தை ஏற்படுத்தக் கூடுமென்று பிரித்தானிய அரசாங்கம் முன்னர் பயண எச்சரிக்கை விடுத்திருந்தது. தற்போது அந்த எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கைக்கான பிரித்தானிய பதில் உயர் ஸ்தானிகர் மார்க் கொடிங் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவுவதாக இதுவரை காலமும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையைத் தளர்த்திக் கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாத காலத்திற்கு மேல் இலங்கையில் தங்கியிருக்கும் அல்லது தங்கியிருக்க உத்தேசித்திருப்போர் பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் தம்மைப் பதிவு செய்வதன் மூலம் நன்மைகளை அடைய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இலங்கையில் காணப்பட்ட பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதாகப் பிரித்தானியா அறிவித்துள்ளது