சம்பியன்ஸ் கோப்பையை வெல்வதே இலக்கு – யூனிஸ்கான் விருப்பம்

இங்கிலாந்தில் நடந்த 20 மூவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் யூனிஸ்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி ‘சம்பியன்’ பட்டம் வென்றது.

தென்னாபிரிக்காவில் வருகிற 22 ஆம் திகதி தொடங்கும் சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கப்டன் யூனிஸ்கான் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஒவ்வொரு கப்டனும் மனதில் சில இலக்குகளை வைத்து இருப்பார்கள். என்னை பொறுத்தமட்டில் வருகிற சம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அல்லது 2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் வெல்ல வேண்டும் என்பது இலக்காகும். இந்த ஆண்டு இறுதியில் நாங்கள் அவுஸ்திரேலியா சென்று விளையாட உள்ளோம்.

நாங்கள் அவுஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. இந்த போட்டித் தொடரில் அந்த குறையை போக்கும் நல்ல வாய்ப்பாகும் என்று நினைக்கிறேன் என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *