வடக்கு, கிழக்கு பாடசாலை: பாடப் புத்தகங்களை இம்மாத இறுதியில் அனுப்ப நடவடிக்கை

வடக்கு, கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கான பாடப் புத்தகங்கள் இந்த மாத இறுதியில் அப்பகுதிகளுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்கள பணிப்பாளர் நாயகம் எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

வடக்கு பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் ஏ-9 வீதியினூடாக அனுப்பப்படவுள்ளன என்றும் அவர் கூறினார்.

2010 ஆம் ஆண்டுக்கான பாடநூல்கள் கடந்த 3 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. தினமும் 30 லொறிகளில் பாடப் புத்தகங்கள் அனுப்பப்பட்டு வருவதோடு இதுவரை மேற்கு, தென், மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கான பாடப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் புஷ்பகுமார தெரிவித்தார்.

வட பகுதிக்கான நூல்கள் 15 கொள்கலன்களில் அனுப்பப்படவுள்ளன.

2010 க்கான பாடநூல்களை அச்சிட 2700 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது. பாடநூல் விநியோகப் பணிகள் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன் நிறைவு செய்யப்பட உள்ளதோடு டிசம்பர் 7 ஆம் திகதி முதல் பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளன.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *