சர்வதேச இருபது-20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்ட்ரேலிய அணித் தலைவர் ரிக்கி பாண்டிங் அறிவித்துள்ளார். சிட்னியில் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்த அவர், இருபது-20 போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெற்றாலும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலிய அணியின் தலைவராக தொடர்ந்து செயல்படுவேன் என்றார்.
இங்கிலாந்தில் நடந்து வரும் ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்பதற்காக இன்று இங்கிலாந்து புறப்படுவதற்கு முன்பாக பாண்டிங் தனது அறிவிப்பை வெளியிட்டார். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆஸ்ட்ரேலியா தோல்வியுற்றது. இதையடுத்து துவங்கிய ஒருநாள் தொடரில் பங்கேற்காமல், ஓய்வு பெறுவதற்காக பாண்டிங் ஆஸ்ட்ரேலியா திரும்பியதால், துணைத் தலைவர் மைக்கேல் கிளார்க் தலைமைப் பொறுப்பை ஏற்றது குறிப்பிடத்தக்கது.