இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது – மங்கள சமரவீர

mangala2222.jpgவவுனியா நலன்புரி முகாம்களில் தங்கியிருந்த இடம்பெயர்ந்தோரை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில், இடம்பெற்ற சுதந்திர மேடை செய்தியாளர் மாநாட்டில், உரையாற்றிய அவர் இடம்பெயர்ந்தோருக்கு தேவையான இடங்களுக்கு சென்று வர உரிமை இருக்கிறது. ஏனைய இடங்களில் உள்ள தமது உறவினர்களிடம் செல்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.
 
இந்த நிலையில் அவர்களை பலாத்காரமாக தடுத்து வைக்க முடியாது என மங்கள சமரவீர குறிப்பிட்டார். தெளிவான ரீதியில் அவர்கள் பதிவு செய்யப்பட்டு, பொது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும். எனினும், இந்த நலன்புரி முகாம்களில் அனைத்துப் பணிகளையும் இராணுவமே மேற்கொண்டு வருகின்றது.
 
வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்கள் சிறைக்கூடமோ அல்லது வதைக்கூடமோ இல்லை என கூறவேண்டுமானால் அங்கு இடம்பெறும் அனைத்து நிர்வாகப் பணிகளும் சதாரண சிவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
 
இதேவேளை, இந்த முகாம்களை வந்து பார்வையிட சர்வதேச நிறுவனங்களுக்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கும் அரசாங்கம் அழைப்பு விடுக்க வேண்டும். இல்லையெனில், அரசாங்கம் கூறும் பொய்களுக்கு சர்வதேசம் ஏமாற்றப்படுமானால், சர்வதேசத்திற்கு பொறுப்புக் கூற வேண்டிய நிலை இந்த நாட்டிற்கு ஏற்படும் என்றும் மங்கள சமரவீர தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *