அரசியல், காங்கிரஸ் கட்சியுடன் பேரம், ராஜ்ய சபா எம்பி என விஜய் நாளும் ஒரு ஷோ காட்டிக் கொண்டிருக்க, அவரை வைத்து அடுத்த படம் தயாரிக்கும் திட்டத்திலிருந்த ஏஸ்கர் பிலிம்ஸ் அந்தத் திட்டத்தைக் கைவிட்டு விட்டதாகக் கூறப்படுகிறது.
விஜய்க்கு பெரும் திருப்புமுனை தந்த காதலுக்கு மரியாதை படத்தை ஒரிஜினலாக தயாரித்தவர் சங்கிலி முருகன். ஒரு கட்டத்தில் படத்தின் மீது நம்பிக்கை இழந்த சங்கிலி, படத்தை ஏஸ்கர் பிலிம்ஸுக்கு கைமாற்றி விட்டாராம், சுமாரான லாபத்துக்கு. அதுதான் ஏஸ்கர் தயாரிப்பில் வந்த முதல் படமாக ஆனது.
இப்போது மீண்டும் விஜய் நடிக்கும் படத்தைத் தயாரிக்கும் திட்டத்திலிருந்தாராம் ஏஸ்கர் நிறுவன உரிமையாளர். ஆனால் இந்த நேரம் பார்த்து விஜய் நாளும் அரசியல் குட்டையைக் குழப்பிக் கொண்டிருப்பதைப் பார்த்து, என்ற எச்சரிக்கை உணர்வில் படத்தைக் கைவிட்டுவிட்டதாக கூறப்படுகிறது.