கொழும்பு, புதுக்கடையில் அமைந்துள்ள மேல் நீதிமன்ற கட்டடத்தின் ஒரு பகுதி நேற்று முன்தினம் இரவு இடிந்து விழுந்துள்ளது. சம்பவத்தின்போது உச்ச நீதிமன்றம் மூடப்பட்டிருந்தமையினால் யாரும் காயங்களுக்கு உள்ளாகவில்லையென பொலிஸார் தெரிவித்தனர். கட்டடத்தின் நான்கு தூண்கள் முறிந்து வீழ்ந்தமையினாலேயே கூரையின் ஒரு பகுதி உடைந்து கீழே விழுந்திருப்பதாகவும் பொலிஸார் கூறினர்.