ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படுகின்ற பிலிப்பைன்சில் வழங்கப்படும் ராமன் மகசேசே விருதுக்கு இவ்வருடம் ஆசிய நாடுகளைச் சோந்த ஆறு பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
2009-ம் ஆண்டுக்கான ராமன் மகசேசே விருதுக்கு யூ ஷியோகாங் (சீனா) தீப் ஜோஷி (இந்தியா) கிரிசனா கிரைசிந்து (தாய்லாந்து), மா ஜுன் (சீனா), அன்டானியோ அபோஸா ஜூனியர் (பிலிப்பின்ஸ்), கா ஹிஸா வா (மியான்மர்). ஆகியோர் தெரிவாகயுள்ளனர்.
பிலிப்பின்ஸ் முன்னாள் அதிபர் மறைந்த ராமன் மகசேசேவை கௌரவித்து இந்த விருது அரசுப்பணி, சமூக சேவை உள்ளிட்ட 6 துறைகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிய நாட்டவர்களை பெருமைப்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது.
பதக்கம் மற்றும் 50 ஆயிரம் அமெரிக்க டாலர் பரிசு அடங்கியது இந்த விருது. ஆசியாவின் நோபல் பரிசு என்றே இது கருதப்படுகிறது. இந்தியாவைச் சேர்ந்த தீப் ஜோஷி சிறந்த சமூக சேவகராக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருது வரும் 31-ம் தேதி முறைப்படி வழங்கப்படுகிறது.