40 மில்லியன் ரூபா (400 இலட்சம் ரூபா) செலவில் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் நரம்பியல் சத்திர சிகிச்சை பிரிவொன்றை நிர்மாணிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சுகாதார போசாக்கு அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். இதன் மூலம் நரம்பு தொடர்பான நோய்களுக்கு கொழும்புக்கு வர வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தென்பகுதி மக்களுக்கு கராபிட்டிய ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சைகளை பெற முடியும் எனவும் அறிவிக்கப்படுகிறது.