மின்சார சபை வேலை நிறுத்தத்திற்கு பொறியியலாளர், முக்கிய சங்கங்கள் எதிர்ப்பு

ecblogo.jpgஅரசாங் கம் ஒரு இலக்கை நோக்கி உத்வேகத்துடன் பயணிக்கும் இத்தருணத்தில் வேலை நிறுத்தத்தில் குதித்து அரசை அசெளகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாமென அமைச்சர் ஜோன் செனவிரத்ன மின்சார சபை ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபையின் சில தொழிற்சங்கங்கள் இன்று சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தப் போராட்டமொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளன.இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர்; பொது மக்களின் நலனையும், மின்சார சபையின் கீர்த்தியையும் மதித்து வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு சகல ஊழியர்களும் வேலைக்குத் திரும்ப வேண்டுமெனவும் அழைப்பு விடுத்துள்ளார்.

அமைச்சர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது :-

மின்சார சபைத் தொழிற்சங்கங்கள் இன்று மேற்கொள்ளத் தீர்மானித்துள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பதில்லையெனவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லையெனவும் மின்சார சபை பொறியியலாளர் உட்பட பல முக்கிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. அத்தொழிற்சங்கங்களுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.ஊழியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாது கடமைக்குச் சமுகமளிக்குமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் 2009 ஆண்டுக்கான சம்பள உயர்வைப் பெற்றுத் தருமாறு கோரி மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று மேற்கொள்கின்றன. எனினும் பத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பத்தாயிரத்துக்கு மேற்பட்ட ஊழியர்கள் இதில் பங்கேற்கமாட்டார்களென மின் வலு எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.

கடந்த 30 வருட காலம் தொடர்ந்த பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்தைப் பாதுகாத்துள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பை மேற்கொள்வதில்லையென ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்தை சகல அரச ஊழியர்களும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் மேற்படி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை எனத் தீர்மானித்துள்ள தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் தமது நன்றியைத் தெரிவிப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *