கிராமோதய நிதிச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் வகையில் ஜனதிரிய நிதியத்தை ஏயற்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்கோன் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார்.
இதன்மூலம் கிராமோதய சபைகளின் செயற்பாடுகளை மேலும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. புதிய சட்டவரைவை பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு விடவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.