கல்முனை மற்றும் சாய்ந்தமருது வீடமைப்புத் திட்டம்

home.jpgஅம்பாரை கரையோர மாவட்டத்தில் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசப் பிரிவுகளில் சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான விசேட வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசத்தைக் கட்டி எழுப்பும் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் என்ற வகையில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்பித்திருந்தார். இரண்டாம் கட்டத்துக்கு நிதியுதவி வழங்க கொரியாவின் பொருளாதார அபிவிருத்திக்கான ஒத்துழைப்பு வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் அமெரிக்கா இதற்கு 6.653 மில்லியன் டொலரை வழங்குகிறது.

இரண்டாம் கட்ட செயற்பாட்டுக்கு 63,45,604 டொலர் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *