முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் பெருந்தொகையான வெடிபொருட்கள் மீட்பு

எண்பது கிலோ எடையுள்ள அதிசக்தி வாய்ந்த-44 கிளேமோர் குண்டுகள், ஐயாயிரம் துப்பாக்கி ரவைகள் உட்பட பெருந்தொகையான வெடிபொருட்களை பாதுகாப்புப்படையினர் மீட்டெடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களில் இராணுவத்தின் பல பிரிவுகள் தொடர்ந்தும் பாரிய தேடுதல்களை மேற்கொண்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இந்தப் பிரதேசங்களிலிருந்து கனரக ஆயுதங்களின் உபகரணங்களையும், பல்வேறு வகையான மோட்டார் குண்டுகளையும் படையினர் மீட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இராணுவத்தின் எட்டாவது அதிரடிப்படையினர் 1, 5, 7, 10, 15, 20 கிலோ எடைகளைக் கொண்ட 44 கிளேமோர்கள், கைக்குண்டுகள்-31, எம். பி. எம். ஜி. ரவைகள்- 4350, எம்-16ரக துப்பாக்கி ரவைகள்- 1000 மற்றும் மோட்டார் குண்டுகளையும் மீட்டெடுத்துள்ளனர்.

புதுக்குடியிருப்பின் கிழக்கிலிருந்து படல் துப்பாக்கி ரவைகள்-160, 82 மி. மீ.ரக மோட்டார் குண்டுகள்- 270,ரி.56 ரக துப்பாக்கிரவைகள்- 950, ஆர். பி. ஜி குண்டுகள் மற்றும் படகு இயந்திரம் ஒன்றையும் மீட்டெடுத்துள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *