குளவி கொட்டி 70 உல்லாசப் பயணிகள் காயம்

000images.jpgசீகிரிய குன்றை பார்வையிடச் சென்ற உல்லாசப் பிரயாணிகளை குளவிகள் கொட்டியதில் சுமார் 70 பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன்தினம் (15) நடைபெற்றதாக பொலிஸார் கூறினர்.

காயமடைந்த சுமார் 34 பேர் தொடர்ந்து சிகிரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

சிகிரிய குன்றின் மேல் இருந்த பார்வையாளர்களை திடீரென குளவி கொட்டியுள்ளது. இது தொடர்பாக உடனடியாக பாதுகாப்பு தரப்பிற்கு அறிவிக்கப்பட்டது. இதன்படி விமானப் படையினர் ஸ்தலத்துக்கு விரைந்து காயமடைந்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர். இதற்கு முன்னரும் பல தடவைகள் சிகிரியாவுக்கு வந்த பார்வையாளர்களை குளவி கொட்டியமை குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *