வன்னி மனிதாபிமான நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்து அநாதரவான நிலையில் யாழ். சாவகச்சேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகள் செட்டிக்குளம் நிவாரணக் கிராமத்திலுள்ள பெற்றோரிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி பணிப்புரை வழங்கினார்.
சுமார் 3 வயது மதிக்கத்தக்க மைதிலி என்ற பெண் குழந்தையும், சுமார் 9 வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையும் பெற்றோர் எங்கே இருக்கிறார்கள் என்ற விபரம் தெரியாமல் நேற்றுவரை சாவகச்சேரி ஆஸ் பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
சாவகச்சேரி ஆஸ்பத்திரியின் புதிதாக கட்டப்பட்டுவரும் வார்ட் தொகுதியை பார்வையிடுவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆளுநர் ஆஸ்பத்திரிக்குச் சென்ற போதே மேற்படி இரண்டு குழந்தைகளையும் கண்டார். இவ்விரண்டு குழந்தைகளும் வவுனியா செட்டிக்குளத்திலுள்ள தாய், தகப்பனுடன் இன்று இணைகின்றன.